சுகன்யா காலையில் கண் விழித்தப்போது மணி ஒன்பதாகிக் கொண்டிருந்தது. நேற்று மாலை, சங்கர் மற்றும் வேணியின் காதல் விளையாட்டை எதேச்சையாகப் பார்த்து, பார்த்ததின் விளைவாக மனம் நிலையில்லாமல் அலைந்து, இரவு சரியாக தூங்காததால் அவள் கண்கள் சிவந்து, இமைகளின் கீழ் மெல்லிய வீக்கம் தென்பட்டது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கேன் என்று கண்கள் கெஞ்சின. அவள் மெதுவாக எழுந்து அறையை விட்டு மொட்டை மாடிக்கு வந்தாள். அங்கு மொட்டை மாடியில், வேணி குளித்தப்பின் துவைத்த துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். அவள் காலையிலேயே எழுந்து தலை குளித்திருக்க வேண்டும். அவள் ஈரத்தலையில் மெல்லிய காட்டன் துணியை கட்டியிருந்தாள். வேணியின் வாளிப்பான உடலின் வடிவமைப்பு மெல்லிய நைட்டியின் ஊடே, அவள் உள்ளே எதுவும் அணிந்திருக்கவில்லை என தெளிவாக காட்டியது. அவள் கொடியில் ஈரத்துணியை போட எம்பிய ஒவ்வொரு முறையும் அவளின் திரட்சியான மார்புகளும், அளவாக பூரித்திருந்த பின் மேடுகளும், அசைந்தாடின. "குட்மார்னிங் வேணியக்கா" சுகன்யா அவள் அருகில் சென்று வாளியில் இருந்த ஈரத்துணியொன்றை எடுத்து உதறினாள். சுகன்யாவின் கண்கள், வேணியின் உடலழகை அளவெடுக்கத் தவறவில்லை. சங்கர் கொடுத்து வைத்தவன், அவன் பாடு கொண்டாட்டம்தான், இவ்வளவு அழகான பெண், கட்டான உடலமைப்புடன், அவனுக்கு மனைவியாக வாய்த்திருக்கிறாள். அவனுக்கு இசைந்து நடந்து கொள்ளுகிறாள். அவனும் வாட்ட சாட்டமாக இருகிறான். அவளை சந்தோஷமாக வைத்திருக்கிறான். பொருத்தமான ஜோடி அவர்கள். எனக்கு எவன் வந்து வாய்க்கப் போறானோ தெரியலை. கூடவே பெண்ணிற்கே உரிய பொறாமை உணர்ச்சியும் வேணியின் மீது உண்டானது. சை....இது என்ன ஒரே நாளில் என் மனசுக்கு என்ன ஆச்சு? ஏன் என் மனசு பைத்தியம் போல இப்படியெல்லாம் சிந்திக்கிறது. இந்த மூன்று மாதத்தில் அவள் எப்போதும் இந்த கோணத்திலிருந்து வேணியை பார்த்ததில்லை. "குட்மார்னிங் சுகு...நீ துணியை வைம்மா... நான் காய வெச்சுக்கிறேன், காலையில் உன் ரூம் கதவை இரண்டு மூன்று தரம் தட்டினேன்... நீ அசந்து தூங்கிக்கிட்டிருந்தே..." வேணி அவளை பார்த்து முறுவலித்தாள். அவர்கள் இருவரும் சனி, ஞாயிறு நாட்களில் காலையில் வாக்கிங் செல்லுவது வழக்கம். "சாரிக்கா, ராத்திரி நான் சரியா தூங்கலை....ரொம்ப நேரம் தூக்கமே வரலை, எப்ப தூங்கினேன் எனக்கே தெரியலைக்கா, என்னால நீங்க வாக்கிங் போகலயா?" அவள் சுரத்தில்லாமல் சிரித்தாள். "என்னடி... உடம்பு கிடம்பு சரியில்லயா, ராத்திரி சாப்பிட்டியா இல்லயா?" உண்மையான பரிவுடன் வேணி அவளைக் கேட்டாள். ஆபிஸிலிருந்து வீட்டுக்கு சுகன்யா வந்தவுடன், வீட்டு மொட்டை மாடியில் தினமும் மாலையில் அரட்டைகச்சேரி நடத்துவது அவர்களின் வழக்கம். அவர்கள் இருவரும் இந்த கொஞ்ச நாட்களிலேயே நல்ல சினேகிதிகளாகிவிட்டார்கள். வேணி மனம் விட்டு பேசும் அளவிற்கு, சுகன்யா பேசுவதில்லை. இது அவளுடய சுபாவம். இது வேணிக்கும் புரிந்திருந்தது ஆனாலும் அவள் இதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. "அதெல்லாம் ஒன்னுமில்லே, நேத்து என்னவோ தெரியல... ஆபீஸ்ல்ல காலையிலிருந்தே கொஞ்சம் தலைவலியா இருந்தது". வேணியின் பரிவைக்கண்டு, சுகன்யா நெகிழ்ந்தாள். "ஆமாம் நீ நேத்தைக்கு எப்ப வந்தே உன் ஆபிஸிலேருந்து?... அத்தையும் மாமாவும் ஊர்லேருந்து வந்துட்டாங்க தெரியுமா...நானும் சங்கரும் சாயந்திரம் கோவிலுக்குப் போயிருந்தோமா...திரும்பி வரதுக்கு லேட்டாயிடுத்து... நேத்து நான் உன்னை பாக்கவே இல்ல"...இல்லன்னா உனக்கு சூடா காப்பி போட்டு குடுத்திருப்பேன். அவள் வெகுளியாக அடுக்கிக் கொண்டே போனாள். "நான், நேத்து...ஆபீஸிலிருந்து கொஞ்சம் சீக்கிரமாவே...மூணு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டேன்க்கா..அதான் சொன்னேல்ல தலைவலின்னு.." வேணியின் கரிசனத்தையும், அவள் தன் மேல் காட்டிய பாசத்தையும் கண்டு அவள் மனதில் குற்றவுணர்ச்சி தலைக் காட்டியது. சுகன்யாவால் பொய் பேச முடியவில்லை. தன் தோழி, தன்னை மறந்து தன் கணவனுடன் ஆசையுடன் கூடியிருந்ததை, அவர்களின் பரிபூரணமான அந்தரங்கத்தை, நேற்று முழுவதுமாக ஒளிந்திருந்து பார்த்ததை அவளால் தன் தோழியிடமிருந்து மறைக்க முடியவில்லை. வேணியின் முகத்தை நேராக பார்த்து அவளால் பேசவும் முடியவில்லை. அவள் கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தது. சுகன்யா, தன் வாழ்கையை முறையாக வாழ நினைப்பவர்களில் ஒருத்தி. அதன் பொருட்டு தனக்கென அவள் சில கொள்கைளை வைத்திருந்தாள். கல்லூரி நாட்களில் அவளுடன் படித்தவர்கள் அவளை, இதன் காரணமாக எத்தனை தடவை கிண்டல் செய்த போதிலும் சுகன்யா அதற்காக கவலைப் பட்டதில்லை. அவள் இந்த தலை முறை பெண்ணாக இருந்த போதிலும், தன்னையொத்த இந்த தலைமுறையினரின் நடத்தையையும், காதல் மற்றும் காமத்தின் பால் அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளையும், முற்றிலும் சரியென அவளால் ஒத்துக்கொள்ள முடிய வில்லை. இன்று காலையில், அவள் உணர்ச்சிகள், அவள் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, தன் நேற்றைய நடத்தையை நினைத்தபோது, அவளுக்கு அவள் செயல் சிறிதே அருவருப்பாக இருந்தது. "என்னடி இது...இப்ப எதுக்கு கண் கலங்கறே...என்னாச்சும்மா" வேணி பதறியவாறே, தன் கையிலிருந்த சங்கரின் சட்டையை கொடியில் எம்பி போட்டுவிட்டு சுகன்யாவிடம் வந்தாள். "வேணி...அக்கா, ஐயாம் சாரி... நான் நேத்து ஒரு தப்பு பண்ணிட்டேன். அதை உங்க கிட்ட நான் மறைக்க விரும்பல" அதை உங்ககிட்ட சொல்லிட்டேன்னா என் மனசுல இருக்கற பாரம் இறங்கிடும்" அவள் முகம் சிவந்து உதடுகள் துடித்தன. "என்னடி இது காலங்காத்தால, நீ ஏதோ புதிர் போட்டு பேசற...முதல்ல கண்ணைத் தொடச்சுக்கடி...விஷயத்தை சொல்லு, அதுக்கப்புறம் பாக்கலாம், நீ பண்ணது தப்பா.. சரியாண்ணு" சுகன்யாவின் கைகளை அவள் பற்றிக்கொண்டாள். "நேத்து, நான் ஆபீஸில் இருந்து திரும்பி வந்தப்ப, நீங்களும், சங்கரும் உங்க பெட்ரூம்ல இருந்தீங்க...நான் நேராக என் ரூமுக்குப் போயிருக்கணும்...உங்க ரூமிலிருந்து வந்த முனகல் சத்ததுல, என் நிலை தடுமாறி, அங்கயே நின்னுகிட்டிருந்துட்டேன்." சுகன்யாவின் குரல் தழுதழுத்து, விசும்பினாள். அவள் வேணியின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள். "ம்ம்ம்.. அப்ப...முனகற சத்தத்தைதான் கேட்டியா...இல்ல..." வேணி தன் கேள்வியை முழுசாக முடிக்கவில்லை. அவள் சுகன்யாவின் முகவாயைப் பிடித்து தன் பக்கம் திருப்பினாள். வேணியின் முகம் உணர்ச்சியற்று இருந்தது. "இல்ல வேணி, என் புத்திக்கெட்டுப் போய், சன்னல்கிட்ட வந்து, நீங்க பண்ணதெல்லாத்தயும் பாத்துகிட்டு இருந்துட்டேன், பிளீஸ்...என்னை மன்னிச்சுடுங்க" சுகந்தி அவள் இரு கைகளையும் பிடித்துக்கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் தத்தளித்தது. எந்த நேரத்திலும் கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்துவிடும் போலிருந்தது. "சரி...சரி...சுகு, முதல்ல உன் கண்ணைத் தொடச்சுக்கோடி...நான் என்னவோ, ஏதோன்னு பயந்து போனேன். என்னப் பொறுத்த வரைக்கும் நீ எந்த தப்பும் பண்ணல, எனக்கு உன்னப்பத்தி நல்லாத் தெரியும்...நீ ரொம்பவே சென்ஸ்டிவா இருக்க...நீ செக்ஸை பார்க்கறதுலயும், அதை அணுகறதுலயும், உன்னை நீ சிறிது மாத்திக்கணும். இது என்னுடைய சொந்த அபிப்புராயம்....அவ்வளதான்... நீ பண்ணது தப்புன்னா... அந்த தப்புல பாதிக்கு முதல்ல நான் பொறுப்பேத்துக்கணும். இதைப்பத்தி நாம அப்புறம் பேசிக்கலாம். சங்கருக்கு இன்னைக்கு வேலைக்கு போகணுமாம். மாமாவுக்கும், அத்தைக்கும் நான் டிஃபன் கொடுக்கணும். அவங்க இரண்டுபேரும் ஏதோ ஒரு சொந்தகாரங்க வீட்டுக்கு போறாங்க... நைட்தான் திரும்பி வருவாங்க. நீ போய் குளிச்சுட்டு ரெடியாகு...இன்னைக்கு நான் பொங்கலும், கொத்சும் பண்ணியிருக்கேன். அவங்க போனதுக்கு பின்ன இங்க மேலயே கொண்டு வர்றேன். நீ நேத்து ராத்திரியே சாப்பிடல, நான் இன்னைக்கு உன் கூட தான் சாப்பிடபோறேன்." வேணி அவள் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு, பக்கத்தில் இருந்த காலி வாளியை எடுத்துக்கொண்டு வேகமாக கீழிறங்கினாள்.
No comments:
Post a Comment